( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை, மாநகர சபையின் புதிய முதல்வராக சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நாளை 18 ஆம் திகதி திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளார்.
நாளை காலையில் 9.00 மணியளவில் கௌரவிப்புடன் ஊர்வலமாக கல்முனைக்குடி முஹிதீன் ஜும்மா பெரிய பள்ளியில் இருந்து துஆ பிரார்த்தனையுடன் அழைத்து செல்லப்பட்டு கல்முனை மாநகர சபையில் தனது முதல்வர் பதவியை பொறுப்பேற்;க உள்ளார்.
இந்த கௌரவிப்பு, ஊர்வல ஏற்பாடுகளை கல்முனையில் உள்ள சமூகசேவை அமைப்புகள், பள்ளிவாசல் அமைப்புகள், விளையாட்டு கழகம்கள், வர்த்தக அமைப்புகள் போன்றன ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் கல்முனையில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த உள்ளதாகவும், இக்கூட்டத்தில் நிதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்மான றவூப் ஹக்கீம் .அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.