பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துச்செல்கின்றன - சல்மா ஹம்சா

பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்;சா தெரிவித்தார்.
காத்தான்குடி அந் நாசர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை தடுத்தல் எனும் தலைப்பிலான செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவத்தினால் நடாத்தப்பட்ட இந்த செயலமர்வில் தொடர்ந்துரையாற்றிய பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்;சா பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதே போன்று சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.
இவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அதிகமாக மேற் கொள்ளப்படல் வேண்டும். வீட்டு வன்முறைகளினால் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் தேவைகள் குறித்து ஆராய்ப்படும் இடங்களில் பெண்களின் பங்கு பற்றுதல் என்பது அவசியமாகும். சமூகத்தில் பெண்கள் தூரப்படுத்தப்பட்ட காலம் மலையேறி விட்டது.

பெண்களின் பிரச்சினைகளை பேசுகின்ற பெண்களின் தேவைகள் குறித்தும் அவர்களின் நிலைமை குறித்தும் ஆராய்கின்ற தீர்மானம் எடுக்கின்ற இடங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டாயமாகும்.

இன்று பெண்களுக்கான பிரச்சினைகளும் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பெண்களின் கல்வி அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் என்பனவும் முக்கியமானதாகும்.

பெண்களின் வாழ்வதாரத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.சி.அப்துல் அஸீஸ{ம் உரையாற்றினார்.