சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியே வழங்கப்பட்ட விஷேட பொது மன்னிப்பு காலம்; இன்று முடிவடைகிறது

(பேரின்பராஜா சபேஷ்)

சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்ட விஷேட பொது மன்னிப்பு காலம்; இன்று முடிவடையவுள்ள நிலையில்  பொது மன்னிப்புக்கு உட்பட்ட சுமார் 10 ஆயிரம் பேரும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
கடந்த மே மாதம் 4ம் திகதி முதல்  இன்று நவம்பர் 03ம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுமார் 16 ஆயிரம் இலங்கையர்கள்  சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கிருப்பதாக  இலங்கை வெளிநர்டு வேலைவாய்யப்பு பணியகம் அறியமுடிந்தது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பபு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய இது தொடர்பில்; தெரிவிக்கையில்

இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு  வாரியத்தின் துனை  பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்திற்குள் அதனை பெற தகுதியுடைய சுமார் 10 ஆயிரம் பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

பெண்கள்  உட்பட ஏனைய 6ஆயிரம் பேரை பொறுத்த வரையில்  சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும்  சவூதி அரேபியா அரசாங்கத்தின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள்.

அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை . கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந் நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களையும்   சாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கான முயற்ச்சிகள் அந் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயம் மூல்  மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவர்களை நாட்டிற்கு அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது. என்றாலும் இதற்கான முயற்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும்  தெரிவித்தார்.

பொது மன்னிப்பு காலத்திற்குள் வெளியேற வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானதும் தாங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக நாடு திரும்பியவர்கள்pல் ஒருவரான மட்டக்களப்பை சேர்ந்த்த எஸ். சிவநித தெரிவிக்கின்றார்

அந் நாட்டிற்கு சட்ட ரீதியாக முகவர்கள் ஊடாக தொழில் பெற்று சென்று  தொழிலும் சம்பளத்திலும் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே சட்ட விரோதமாக தங்கியிருந்து வேறு இடங்களில் தொழில் புரிய நேரிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

காத்தான்குடியை சேர்ந்த  மொகமட் சஜீத் பொது மன்னிப்பு காலம் முடிவடைவதற்கு அண்மித்த நாட்களில்  அந்நாட்டு காவல் துறையினரின் சோதனைகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருந்தது என்கின்றார்.

நாடு  திரும்புவதை துரிதப்படுத்துவதற்காகவும் அதற்கான வேலைகளை இலகுவாக செய்வதற்கும் மேலதிக செலவாக 1500 சவ+தி ரியால் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

உள்நாட்டில் தங்களால் தொழில் பெற முடியாத நிலையே தொடர்ந்தும்  இருப்பதால் மீண்டும் வேறொரு நாட்டிற்கு தொழில் நிமித்தம்; செல்வதையே அவர்களில் பலரும் விரும்புகின்றார்கள்.

பொது மன்னிப்பு காலத்திற்குள் வெளியேற தவறி தொடர்ந்தும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தமது நாட்டு குடிவரவு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சவ+தி அரேபியா அறிவித்துள்ளது.

அதாவது சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2வருட சிறைத்தண்டனை அல்லது சுமார் 10 ஆயிரம் சவூதி  ரியால் குற்றப்பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறகின்றது.