கல்முனையின் புதிய முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து அங்கிருந்து மாநகர சபை அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பள்ளிவாசல் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள உட்பட அரசியல், சமூக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.