மட்டக்களப்பு ஆலயங்களில் கொள்ளையிட்ட இருவர் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக பல்வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளதுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பெறுமதி வாய்ந்த பொருட்களும் கைப்பற்றபட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக நவரத்ன தெரிவித்தார்.

இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்டு வந்த பொலிசார் விநாயகபுரம் வாழைச்சேனை பகுதியில் மேற்படி நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கபிள்ளையர் ஆலயம், பட்டியடிச்சேனை நாகதம்பிரான் ஆலயம் மற்றும் தனியார் வீடுகளில் களவாடப்பட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.