நிந்தவூரில் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 பேர் கைது –பொலிஸ் ஊடக பேச்சாளர்

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

நிந்தவூரில் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அரச சொத்துகளுக்கு சேதமேற்படுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 22 சைக்கிள்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.