உணவு விடுதிக்குள் விபச்சாரம் ? -மட்டக்களப்பில் இரு பெண்கள் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்புறமாகவுள்ள உணவு விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு யுவதிகளை சந்தேகத்தின்பேரில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

குறித்த உணவு விடுதியில் கடமையாற்றும் குறித்த பெண்கள் இரவில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த உணவு விடுதியை காத்தான்குடியை சேர்ந்த ஒருவரே நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.