சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் திறப்பு விழா 28.10.2013 அன்று நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக வருகைதந்த உயர்கல்விஅமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விரிவுரை மண்டபத்தினையும் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கி.கோவிந்தராஜா, பதிவாளர் கே. மகேஸன், நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிரேம்குமார், சௌக்கியபராமரிப்பு பீட பீடாதிபதி கலாநிதி த.சுந்தரேசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இதில் கலந்து சிறப்பித்தனர்.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் தமிழ் பாரம்பரிய இன்னிய அணியினரால் அழைத்துவரப்பட்ட அதிதிகள் புதிய கட்டடத்தொகுதியை திறந்து வைத்து,  கண்காட்சியை பார்வையிட்ட பின்னர், தொடர்ச்சியாக இராசதுரைஅரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைச்சருடனான  கலந்துரையாடலில் பங்கெடுத்ததோடு நிறுவக மாணவர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட  கலைநிகழ்வுகளையும்  கண்டுகளித்தனர்.