செட்டிபாளையம் அருள் மிகு ஸ்ரீநித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய தீர்த்தம் புதன்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட செட்டிபாளையம் அருள் மிகு ஸ்ரீநித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆகம விதிகளுக்கு அமைய சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

கடந்த 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

10தினங்களாக இடம்பெற்றுவரும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

புதன்கிழமை காலை கும்பபூசை,மூலஸ்தான்பூசை,தம்ப பூசை இடம்பெற்று காலை 9.00மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை 9.30மணிக்கு தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் புதன்கிழமை மாலை 6.00மணிக்கு மூலஸ்தாபன பூசை இடம்பெற்று வசந்த மண்டப பூசை,தம்ப பூசை இடம்பெற்று இரவு 8.00மணிக்கு கொடியிறக்கபூசை இடம்பெறவுள்ளது.