இருதயபுரம் 11ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றின் அறையிலிருந்து இந்தச் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
7 பிள்ளைகளின் தந்தையான அழகையா இருதயராஜ் (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வழமைபோன்று குறித்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர் காலையில் சடலமாக காணப்பட்டதாக தெரியவருகிறது.
கடந்த 3 வருடங்களாக நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இவர், தொழில் எதுவுமின்றி வீட்டிலேயே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.