கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 10வது தினமான இன்று தீர்த்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
தீர்த்தல்,தலம்,விருட்சம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்டு பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் மாமாங்யேஸ்வரர் ஆலயம் தானாக தோன்றியதன் காரணமாக சுயம்பு ஆலயமாகவும் போற்றப்பட்டுவருகின்றது.
இராவணேஸ்வரனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணன் அனுமானின் வாலில் கொழுத்திய தீயை அணைத்த இடமாகவும் ஆலயம் சிறப்பு பெற்றது.
இராம பிரானின் தன்டாயுதத்தால் உருவான தீர்த்தக்கேணியே மாமாங்கர் ஆலய தீர்த்தக்கேணியெனெ கர்ண பரம்பரைக்கதைகள் கூறுகின்றன.
இத்தனை சிறப்புகளைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த தீர்த்த உற்சவத்தில் விசேடமாக பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வு சிறப்பு பெறுகின்றது.தாய்,தந்தையர்களை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிதிர்கடன் செலுத்துதல் இந்த தீர்த்தத்தின் சிறப்பாகும்.