பாசிகுடாவில் நீரிழ் மூழ்கிய சிறுமி காப்பாற்றப்பட்டார்

கல்குடா பொலிஸ் பிரிவில் பாசிக்குடா கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் நீரிழ் மூழ்கியுள்ளார்.

இன்று (09) காலை 9.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து கடற்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாசிக்குடா உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமிக்கு தேவையான முதலுதவிகள் அளிக்கபட்ட பின் சிறுமி குணமடைந்துள்ளார்.

11 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் இவர் கல்குடா - கல்லாறு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.