சமுர்த்தி வங்கி கொள்ளை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காவலாளி பிணையில் செல்ல அனுமதி

Husna

ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கம் நேற்று (25.07.2013) வியாழக்கிழமை உடைக்கப்பட்டு கணணி கொள்ளளையடிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட பிரதேச செயலக இரவு காவளாலி இன்று (26.07.2013) வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட இரவுக் காவளாளியை இன்று (26.07.2013) வாழைச்சேனை நிதிவான் நீதிமன்றத்தில் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியதற்கினங்க ஐயாயிரம் ரூபா காசுப் பிணையிலும் ஒரு லட்சம் ரூபா சரிரப் பிணையிலும் விடதலை செய்துள்ளதுடன் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 02.10.2013ம் திகதி இடம் பெரும் என்றும் அன்று மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலக வளாகத்தில் உள்ள சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வங்கியில் பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேசை லாச்சிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் வங்கிச் சங்கத்திற்கு சொந்தமான கணணி ஒன்று கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்தே பிரதேச செயலக இரவு காவளாளி கைது செய்யப்பட்டிருந்தார்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.