பிள்ளையாரடி விபத்தில் ஒருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சைக்கிளில் பயணம் செய்தவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈச்சந்தீவிலிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த விவசாயியான ச.இந்திரன் (வயது 58) என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்; மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.