தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய தீர்த்த உற்சவம்

(வரதன் தனு)

கிழக்கிலங்கையின் வரலாற்று புகழ்மிக்க தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

குடந்த 10தினங்களாக இடம்பெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூசைம ற்றும் சுவாமி உள்வீதி,வெளி வீதியுலா இடம்பெற்றுவந்தது.

முட்டக்களப்பு மாவட்டத்தின் மிக நீண்ட வரலாற்று பின்னணியை கொண்ட தாந்தாமலை முருகன் ஆலயமான தமிழ் பாரம்பரியங்களுடன் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று தாந்தாமலை ஆலய தீர்த்தக்கேணியில் சுவாமியின் தீர்த்த உற்சவம் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்த தீர்த்த உற்சவத்தில் பெருந்திரளான அடியார்கள் கலந்துகொண்டனர்.