முறக்கொட்டாஞ்சேனை நட்சத்திரா மகளிர் அமைப்பின் மாணவர் பாராட்டு விழா

(சபேஸ்)

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் நட்சத்திரா மகளிர் கொத்தணி அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்களின் நுண்ணறிவு மற்றும் கலாசார பண்பாட்டையும் மேம்படுத்தும் போட்டி நிகழ்வில் பாராட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை எல்.ஓ.எம் சமூக மண்டபத்தில் இடம்பெற்றது.


தமிழர் பாரம்பரிய வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா, கோறளைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி; ந.குணலிங்கம், எல்.ஓ.எச் நிறுவன முகாமையாளர் எல்.ஆர்.டேவிட், திட்ட முகாமையாளர் வண ஏ.சௌந்தரராஜன், கோறளைப்பற்று தெற்கு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஆர்.பற்குணநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வின் போது பேச்சு, தமிழ் ஆங்கில கவிதை, நடனம் போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்;களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.