ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்தாமல் பிள்ளையாரடிப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதன் காரணமாகவே இந்;த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊயிரிழந்தவர் கல்லடி பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற்றும் அமீர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவலை தெரிவிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.