ஐயன்கேணி தமிழ் வித்தியாலய மாணவர்களின் சிரமதானமும் டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டலும்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்துக்குட்பட்ட ஐயன்கேணி தமிழ் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

ஐயன்கேணி பிரதேசத்திலுள்ள பாரதிபுரம், மணியபுரம், ரெட்பானா புரம் பகுதிகளில் மூன்று தொகுதிகளாக பிரிந்து சென்று இந்த சிரமதானம் மற்றும் விழிப்பூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர.;

மாணவர்களால் பொதுமக்களுக்கு டெங்கு தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் வீதி நாடகம் மூலமும் விளைவுகள் தெளிவுபடுத்தப்பட்டன.

அண்மைக்காலத்தில் இப்பிரதேசத்தில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வின் அவசியம் இனங்காணப்பட்டமையை தொடர்ந்து அதிபர் எஸ்.ஜெயராஜா மற்றும் பாடசாலை முகாமைத்துவ குழு, பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரின் கலந்துரையாடலின் பின்னர் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.