நாட்டின் மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி
மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடிய வாய்ப்பு
உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2
மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு
மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய
மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல்
அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழை :
சிலாபம் முதல் கொழும்பு, காலி வழியாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று :
காற்று
தென்மேற்கில் இருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40)
கி.மீ. ஆகும். காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய
வரையிலும், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும்
உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு (50-60)
கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
திருகோணமலையில் இருந்து
முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும், கல்பிட்டியவில் இருந்து
கொழும்பு வழியாக காலி வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம்
சில நேரங்களில் மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் :
காங்கேசன்துறையில்
இருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும், காலியில் இருந்து
ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள்
அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும்.
திருகோணமலையில் இருந்து
முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும், கல்பிட்டியவில் இருந்து
கொழும்பு வழியாக காலி வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகள் அவ்வப்போது
ஓரளவிற்கு சீற்றத்துடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது,
அந்த கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும்
அக்கடல்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.
