தையிட்டி விகாரைக்கு எதிராக பிரித்தானிய தமிழர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டத்தில் கடந்த டிசம்பர் (21)ம் திகதி அன்று மதகுரு வேலன் சுவாமி உட்பட ஐந்து தமிழர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதனை கண்டித்தும் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரியும் தாயகத்தில் 03.01.2026 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் சர்வதேசத்திற்கு தெரிவிக்கவும் பிரித்தானியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.