கன்னியமர்வில் குழப்பம்






மன்னார் நகரசபையின், கன்னி அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு, முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது. 

இதனைத் தொடர்ந்து, நகரசபை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட வரவு  செலவு  திட்டம்  சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு குழப்பநிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
 
வரவு  செலவு  திட்டத்து க்கு எதிராக நகரசபை உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஏற்பட்ட குழப்பநிலையால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.