விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.
அந்த நிலையில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.