மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்ற 94 வயதுடைய ஒருவரை இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
உடனடியாக மீட்கப்பட்ட அந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை மகாரோகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ வீரர்களின் இந்த மனிதாபிமான மற்றும் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.