விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற செயலாக்கத்தின் நெல் வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்றது.
நெல் விதைப்பில் நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட யுவு 307என்ற வெள்ளை நெல் அறுவடைசெய்யப்பட்டது.
பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன்,கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி,கிராமசேவையாளர் பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.