சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2.16 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மருதங்கேனி பகுதியில் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் நெல்லியடி விஷேட அதிரடிப் படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மருதங்கேனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.