கந்தானையில் துப்பாக்கிச்சூடு; இருவர் காயம்





கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தானையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காரில் இருந்த இருவர் காயமடைந்தனர். 

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.