இலண்டனை சேர்ந்த புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி பங்களிப்புடன் இந்த பிரமாண்ட அன்னதான மடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
கோவில்போரதீவு கண்ணகியம்மன் ஆலய வண்ணக்கர் தே.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் பரநிருபசிங்கம், இலண்டனை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களான மா.நேராசா, மா.லிங்கராசா, அ.மேகலாதன்,அ.வேங்கடேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னதான மண்டபம் திறந்துவைக்கப்பட்டதுடன் பல்வேறு கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் கோவில்போரதீவில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை,சாதாரண தரம்,உயர்தரம் ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டன.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.