இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்காக போட்டியிடும் அருள்ராஜா பிரேமாகரன் என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் அன்றைய தினத்தில் மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்ததாகவும் அந்த நேரத்தில் பெற்றோல் குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவ் தாக்குதலில் உயிர்களுக்கு பாதிப்பில்லை எனவும் அந்த நேரத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் உறங்கிக்கொண்டு இருச்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வீட்டின் கூரையின் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீற் எரிந்துள்ளதாகவும் வேறு சேதங்கள் ஏற்படவில்லையெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.