மட்டக்களப்பு அரசடி பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மரணம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று இரவு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக 10பேர் கொண்ட குழுவினால் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழைச்சேனை- பேத்தாளையை சேர்ந்த  டிலோஜன் 33 வயதுடைய ஒருவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே கத்திக்குத்து;தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பி மீது சிலர் தாக்குதல் முன்னெடுக்க முயற்சிப்பதைக்கண்டு அதனை தடுக்கச்சென்ற அண்ணனே இந்த தாக்குலில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.