இலஞ்ச ஒழிப்பு ஆணைக்கு அதிகாரிகளினால் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர் கைது


வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் பேரில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிபத்திரத்திற்காக    15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதனை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்  கரடியனாறு பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான அரசியல் செயற்பாட்டாளர் மட்டக்களப்பு நகரில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.