மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று சனிக்கிழமை இரண்டாம் நாள் பூஜையாக மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது.
நேற்று மாலை தம்ப பூஜை மூலவர்க்கான அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலாவும் நடைபெற்று சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாம் நாள் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் சிறப்பு மேள நாதஸ்வர கச்சேரியும் நடைபெறவுள்ளது.