மட்டக்களப்பு எமக்காக நாம் உதவிடுவோம் அமைப்பினால் ஆரையம்பதி மாவிலங்கதுறை கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவிலங்கதுரை கிராமத்தில் பொது அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்பு மாவிலங்கதுறை விக்னேஸ்வரா வித்யாலயத்தில் கல்வி கற்கும் தேவைப்பாடு உடைய 60 மாணவர்களுக்கு எமக்காக நாம் அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
எமக்காக நாம் அமைப்பின் தலைவர் லோ. தீபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ் நிகழ்வில் அந்த அமைப்பின் இணைப்பாளர்களான கலாச்சார உத்தியோகத்தர் பிருந்தாவன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரணிராஜ், கேதீஸ்வரன், கிராம சேவை உத்தியோகத்தர், இளைஞர் கழக தலைவர் உப தலைவர் ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.