வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம்” எனவும் அவர் கூறியுள்ளார்.