தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் மூவினமக்களும் மிகுந்த நன்மை அடைந்துள்ளதால் அதனைஇன்னமும் காத்திரமாக எடுத்துச் சென்று மக்களைவிழிப்படைய வைக்க வேண்டுமென காணிஉரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின்நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே. நிஹால்அஹமட் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கும்; பல்வேறு பிரச்சினைகள்தொடர்பாகவும் அவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளைப்பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் தகவல் அறியும்உரிமைச் சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வூட்டல்செயலமர்வு அட்டாளைச்சேனையிலுள்ள மனிதஎழுச்சி அமைப்பு அலுவலகத்தில் ஞாயிறன்று 30.07.2023 இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணிஉரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், காணிகளைஇழந்தவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ட்ரான்ஸ்பெரன்சி இன்ரநெஷனல்அபைப்பின் அம்பாறை மாவட்ட திட்ட அலுவலர் எம். லக்ஸ்மிகாந்த் வளவாளராகக் கலந்து கொண்டுசெயலமர்வை நடத்தினார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தகவல் அறியும்உரிமைக்கான சேவை மையத்தின் மூலம் இதுவரைசுமார் 750 பேர் சேவைகளைப் பெற்றுள்ளதாகவும்அதில் 400 இற்கு மேற்பட்டோர் கோரிய தகவல்அறியும் உரிமை விண்ணப்பங்கள் வெற்றி அளித்துபொதுமக்கள் தகவல்களைப் பெற்றுள்ளதாகவும்அங்கு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகதீர்வின்றித் தொடரும் காணி இழந்தவர்களின்பிரச்சினைகளில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களும்இனிமேல் முன்னெடுக்கவுள்ள விடயங்களும்கலந்தாலோசிக்கப்பட்டன.
13வது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில்தீர்வுகளை முன்னெடுக்கும் முயற்சிகளில் காணிஇழந்து பாதிக்கப்பட்ட மக்களின்முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்தீர்மானிக்கப்பட்டது.
மேலும், 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைக்காகஇரத்தம் சிந்தி உழைத்து வரும் மலையக மக்களுக்குஆதரவை நல்க வேண்டும் என்ற நோக்கில்இடம்பெறும் ஆதரவுப் பேரணியில் கிழக்கு மாகாணகாணி இழந்த முஸ்லிம்களும் இணைந்துகொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.