மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாதுகாக்கப்பட்டது!!


கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர்எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரியசேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் நேற்று (18.03.2023) சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று முன்மாதினம் மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன்புறப்பட்ட புகையிரம் நேற்று  சனிக்கிழமை காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில்இருந்து புறப்பட்டு இருபது நிமிடத்தில் வெலிக்கந்தைபுகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் 188வது மைல் கல்அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ளநிலையில் புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததையடுத்து புகையிரத்தை நிப்பாட்டியதுடன் பாரிய விபத்தில் இருந்து புகையிரத்தை பாதுகாத்துள்ளனர் என்று புகையிரதநிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதனை அடுத்து மட்டக்களப்பு புகையிரத நியைத்தில்இருந்து மற்றுமொரு புகையிர இயந்திரத்தைகொண்டுவந்து தீப்பிடித்த புகைதிரத்துடன்எரிபொருள் அடங்கிய கொள்கலன்களையும்மட்டக்களப்புக்கு மதியம் 12.00 மணியளவில்கொண்டு சென்றனர்.