அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய அரச கொடுப்பனவுகள் ஏப்ரல் 10க்கு முன்னர்!!


அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.