ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் நாளை சிறப்பு நிகழ்வு


ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரா ஆலயத்தில் நிகழும் சுபகிருது வருடம் விநாயகர் சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹரா நிகழ்வானது எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் நாள் (27.12.2022) செவ்வாய்க்கிமை மாலை 4.00 மணி அளவில் சூரசம்ஹாரம் நிகழ்வதற்கு இறைவன் திருவருள் கூடியுள்ளது. 

இதனை முன்னிட்டு மார்கழி மாதம் 11ம் நாள்(26.12.2022) திங்கட்கிழமை புதிதாக நிர்மானிக்கப்பட்ட பூத வாகனமும், கஜமுகா சூரனும் பட்டன பிரவேசம் செல்லவுள்ளது. 

எனவே அடியவர்கள் கலந்துகொண்டு கஜமுகா சூர சம்கார நிகழ்வினை பார்வையிட்டு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர பெருமானின் திருவருள் பெறுமாறு அன்புக்கரம் நீட்டி அழைக்கின்றோம்.