இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அபிப்பிராயத்தின் பேரில் வாக்களித்து, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பின் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.
டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
4 செல்லுபடியற்ற வாக்குகள்.
2 அளிக்கப்படாத வாக்குகள். ஆகியன பதிவாகியது.
இத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசானாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.