மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வரலாற்றுசிறப்புமிக்க கண்ணகியம்மன் ஆலயத்திற்கு குடிநீர் விநியோக இணைப்பு வழங்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் 12இலட்;சம் ரூபா சொந்த நிலையில் இந்த குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றுசிறப்புமிக்க கண்ணகியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் நன்மை கருதி இந்த குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மேகராஜ் வினோராஜின் தந்தையான சுப்ரமணியம் மேகசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக குறித்த குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வில் களுவாஞ்சிகுடி கிராம தலைவரும் ஆலயத்தின் வண்ணக்கருமான அ.கந்தவேழ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.