இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் இருந்து உடனடி தீர்வு காணுமாறு வலியுறுத்தி அரச சேவையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் இன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களில் உள்ள அரச அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டதுடன் அரச சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது.
நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த சுகயீன லீவு போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய நாட்டு சூழ்நிலையில் வாழ்வாதரப் பிரச்சினையை முன்னிறுத்தி இதற்கு மிக விரைவில் தீர்வு காணுமாறு கோரி இன்று அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த சுகவீன லீவு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது பின்வரும் பாதிப்புக்களுக்கு மிக விரைவில் தீர்வை எதிர்பார்க்கின்றோம்.
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம்
2.எரிபொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும்
3.சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடும் விலையேற்றமும்
4.மின் கட்டண உயர்வும் மின்சாரம் தடைப்படலும்
5.காகிதத்திகள் மற்றும் சகல பொருட்களின் தட்டுப்பாடும்
6.போக்குவரத்து கட்டணங்களின் அதிகரிப்பு
மேற்படி பிரச்சினைகளால் எமது உத்தியோகத்தர்கள் கடமையை சரிவர ஆற்ற முடியாத சூழ்நிலை காணப்படுவதாலும் மற்றும் அவர்கள் முகங்க் கொடுக்கும் வாழ்வாதரப் பிரச்சினைகளுக்கும் மிக விரைவில் சரியான தீர்வை எதிர்பார்த்தும் இத்தொழிற்சங்கப் போராட்டத்தை நடாத்தத் தீர்மானித்துள்ளோம். இப்போராட்டத்திற்கு உத்தியோகத்தர்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.