சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணி நிறுத்தம்...!!


சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று புதன் கிழமை முதல் இரு நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமையாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல், 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங் கங்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.