வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி...!!


வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உயர்கல்விக்காக வெளியேறிய மாணவர்கள் குழுவொன்றுக்கு முன்னரும் இவ்வாறான விசேட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி திட்டங்கள் குறித்தும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.