துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, சுற்றாடல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
வளி மாசடைவதைக் குறைப்பது இதன் ஒரு நோக்கமாகும் எனக் கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாகன நெரிசல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பயணிக்கும் வாகனம் ஒன்றினால், அரசாங்கத்துக்கு கிலோமீற்றர் ஒன்றிற்கு 103 ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு கிலோமீற்றருக்கு 236 ரூபாவுக்கும் அதிகப் பணத்தை சேமிக்க முடியும் என்பதால், அரசாங்கத்துக்கு 340 ரூபா இலாபம் ஏற்படுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, ஈருருளி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.