சூரியகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 மற்றும் 40 வயதுடைய தெபரன் சைட் இத்தகந்த பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.
பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.