கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், சுமந்திரன் சந்திப்பு...!!


கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரியின் மகன்) உள்ளிட்ட நாடாளுமன்ற குழுவினரை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது வடக்கில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்

குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.