காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு வனஜீவராசி அதிகாரிகள் தீர்மானம்...!!


மாத்தளை - இம்புலன்தண்ட - வாவன்னாவத்த மற்றும் துன்கலவத்த ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு வனஜீவராசி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

மாத்தளை - இம்புலன்தண்ட பிரதேசத்தில் காட்டு யானையொன்றின் தாக்குதல் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசி அதிகாரிகளை சில நபர்கள் தாக்க முயன்றுள்ளனர்.

வனஜீவராசி அதிகாரிகளை இவ்வாறு தாக்க முற்பட்ட நபர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ரஜ்கம்மன வனஜீவராசி அலுவலகத்தின் அதிகாரிகள் மாத்தளை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.