12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்...!!


நாட்டில் 12 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை, அனுராதபுரம் மற்றும் குருணாகல் ஆதார வைத்தியசாலைகளில் இந்த வேலைத்திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊனமுற்ற சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.