அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

(புருஷோத்)
அமைச்சரவையில் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி செயலகத்தில் வேறு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் 

மின்சக்தி மற்றும்எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளது.

அவ்வாறே ஊடகத்தறை அமைச்சராக செயற்படும் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு சுகாதார அமைச்சும் 

பவித்திரா வன்னியா ஆராட்சிக்கு போக்குவரத்து அமைச்சு பதவியும் கல்வியமைச்சராக செயற்படும் ஜீ.எல். பீரிஸுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவியும் வழங்கப்படவுள்ளது.

மின்சக்தி அமைச்சு காமினி லொக்குகே யிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 

இதன் இடையே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறைக்கு மேலதிகமாக அவிபிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கபட்டுள்ளார்