மட்டக்களப்பு மாவட்டத்தில் 114கொரனா தொற்றாளர்கள்-மூன்று மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று மூவர் உயிரிழந்துள்ளதுடன் 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று ஞாயிற்றுக்கிழமை 04 ஆம் திகதி தெரிவித்தார்.

ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒருவரும் , கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவருமாக மூவர் உயிரிழந்ததாக மேலும் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில்

மட்டக்களப்பு - 31

காத்தான்குடி - 57

ஓட்டமாவடி 02

வாகரை-12

கிரான்-01

கோறளைப்பற்று மத்தி - 02

செங்கலடி - 01

ஏறாவூர் - 06

வெளிமாவட்டத்தார்-02

பேர் உட்பட்ட 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.