மின்னல் தாக்கி விவசாயி மரணம்

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில வியாழக்கிழமை (15) மாலை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது விசாயி ஒருவர் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது....
தற்போது அப்பகுதியில் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மும்முரமாக வயலில் வேலை செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை(15) நண்பகல் வரைக்கும் அப்பகுதியில் கடும்உஸ்னத்துடன் வெயில் காணப்பட்டது. ஆனாலும் மாலை வேலையில் திடீரென அப்பகுதியில் பலத்த இடி மின்னல்இ மற்றும் காற்றுடன் மழை பெய்திருந்து.

இந்நிலையில் மாலையர்கட்டு கிராமத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கிவயிலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மாலையர்கட்டு கிராமத்தைச்சேர்ந்த நல்லதம்பி மோகனசுந்தரம் எனும்விவசாயி உயிரிழந்துள்ளதார்.

இந்நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரகள் தெரிவிக்கின்றன. களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதத்ததை எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன்.பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Show quoted text